தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பணிப்பெண் !

 இந்தியாவில் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சண்டிகரை சேர்ந்தவர் அஞ்சு (18). இவர் வீட்டு வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் தான் பணிபுரியும் ஒரு வீட்டில் இரவு நேரத்தில் அஞ்சு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அந்த வீட்டின் உரிமையாளர்கள் அஞ்சுவை அடித்து கொடுமைப்படுத்தியதாலும், வீட்டு அனுப்ப மறுத்ததாலும் அவர் தற்கொலை செய்து கொண்டார் என குடும்பத்தார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொலிசார் கூறுகையில், சம்பவத்தன்று வீட்டு உரிமையாளர்கள் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு நள்ளிரவு வந்துள்ளனர், அப்போது பணிப்பெண் அஞ்சு அங்கு தான் இருந்திருக்கிறார்.

காலையில் அவர்கள் தூங்கி எழுந்த போது அஞ்சு தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்துவிட்டு எங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

அஞ்சு எழுதிய கடிதம் எதுவும் கிடைக்கவில்லை, அவர் குடும்பத்தார் புகார் கொடுத்துள்ளனர், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.