கொடூரமாக கொலைசெய்யப்பட்ட வாலிபர்!

 தமிழ் நாடு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சுடுகாடு அருகே உள்ள மின்கம்பத்தில் கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார்.

இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி சிதம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்து கிடந்தவர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடை மணல் கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் சந்தோஷ்குமார்(வயது 27) என்பதும்,

அவரை மர்மநபர்கள் கொடூரமாக அடித்து கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட சந்தோஷ்குமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த அவர், நேற்று முன்தினம் வேலைக்காக மீண்டும் சென்னை செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் அவர் வடக்குதில்லைநாயகபுரம் அழிஞ்சிமேடு சுடுகாடு அருகே கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் கிடந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.

மேலும் இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக அப்பகுதியில் சுற்றித்திரிந்த 10 திருநங்கைகளை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.