கொரொனாவால் தாக்கப்பட்ட உலக தலைவர்கள்!!
கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் உலகையே பாடாய் படுத்தி வருகிறது. எளிய மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாரபட்சம் பாக்காமல் அதிபர்கள், பிரதமர்கள், ராஜ குடும்பங்களை சேர்ந்தவர்களையும் கொரோனா தாக்கியிருக்கிறது. அப்படி பாதிக்கப்பட்ட உலக தலைவர்களின் பட்டியலை
பார்க்கலாம்.
டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு மட்டுமல்லாமல் அவரது மனைவி மெலனியா ட்ரம்பிற்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இருவரும் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதன்பின் அவர் 10 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். முதல் ஏழு நாட்களுக்கு பின் அவரது நிலைமை மோசமடைந்தது. எனினும், தீவிர சிகிச்சையின் விளைவாக அவர் கொரோனா பிடியில் இருந்து விடுபட்டார்.
இளவரசர் சார்லஸ்

இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கும் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவரது மனைவி கெமிலாவுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டார்.
மிக்கெயில் மிஷுஸ்டின்

ரஷ்ய பிரதமர் மிக்கெயில் மிஷுஸ்டினுக்கு கடந்த மே மாதம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. உடனே அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை