மின்னல் தாக்கியதில் திருக்கோவில் பகுதியில் தம்பதியினர் உயிரிழப்பு!
அம்பாறை, திருக்கோவில் பகுதியில் இன்று பிற்பகல் மின்னல் தாக்கியதில் விநாயகபுரத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் தம்பதியினர் என்பதுடன், காணியொன்றில் நிலக்கடலை செய்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
விநாயகபுரம் தபாலக வீதியைச் சேர்ந்த லோகநாயகம் யோகேஸ்வரன் (வயது-46) மற்றும் அவரது மனைவி காசிப்பிள்ளை ஜெயசுதா (வயது-46) ஆகிய தம்பதிகளே இவ்வாறு உயிரழந்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த இருவரது சடலங்களும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை