டெங்கு நோயினால் மட்டக்களப்பில் ஒருவர் மரணம்!!

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் மேலும் ஒரு மரணம் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  பதிவாகியுள்ளது.


இவ்வருடத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தினால் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற மூன்றாவது மரணமாக இது பதிவாகியுள்ளது.


கடந்த செப்டம்பர் 26ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரையும் 16 பேர் டெங்குநோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 நோயாளர்களும், வாழைச்சேனை, மட்டக்களப்பு மற்றும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 2 டெங்கு நோயாளர்களும், கோரளைப்பற்று மத்திய, வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருநோயாளருமாக மொத்தம் 16 பேர் மாவட்டத்தில் இனங் காணப்பட்டுள்ளனர்.


இருப்பினும் வாகரை, செங்கலடி, ஏறாவூர், வவுணதீவு, காத்தான்குடி, பட்டிப்பளை, வெல்லாவெளி,களுவாஞ்சிக்குடி மற்றும் கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.


மேலும் கடந்த 9 மாதங்களில் இம்மாவட்டத்தில் 2 ஆயிரத்தி 248 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.