மீண்டும் பிரான்ஸில் கொரோனா தொற்று அதிகரிப்பு!!

 


பிரான்ஸில் நாள் ஒன்றுக்கு அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று உறுதியான நோயாளிகளின் எண்ணிக்கை 21,210 ஆக பதிவாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஐரோப்பாவில் கடந்த 7 நாட்களில் பதிவான நோயாளிகளின் எண்ணிக்கையின் பிரகாரம், பிரான்ஸில் கடந்த வியாழக்கிழமை மட்டும் 30,621 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கடந்த ஏழு நாட்களில் கிட்டத்தட்ட 142,800 புதிய தொற்றுநோய்களைப் பதிவு செய்துள்ளது என சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


இது மார்ச் நடுப்பகுதியிலிருந்து மே நடுப்பகுதி வரை இரண்டு மாத முடக்க கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட காலத்தில் பதிவு செய்யப்பட்ட 132,430 நோயாளிகளை விட அதிகம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அதிகரிப்பு காரணமாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடந்த புதன்கிழமை பிரான்ஸின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியில் இரவு நேர ஊரடங்கு உத்தரவுக்கு உட்படுத்த உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.