யாழில் தப்பியோடிய இந்திய மீனவர்கள்!


யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இந்திய மீனவர்கள் தங்கியிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பினை அடுத்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் 79 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 



 அந்தப் பகுதியில் கடலட்டை பிடிப்பதற்காக தங்கியிருக்கும் மன்னார் மாவட்ட மீனவர்களுடன் இந்திய மீனவர்களும் எல்லைதாண்டிவந்து தங்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதி சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் இந்திய மீனவர்கள் தப்பிச் ஓடியுள்ளனர். இதனையடுத்து அவர்களுடைய நெருக்கமான தொடர்புகளை பேணிய 9 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

70 பேர் வீடுகளில் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அங்கிருந்து எவரும் கடல் மார்க்கம் ஊடாக நாட்டுக்குள் நுழை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய மீனவர்கள் அத்துமீறி உள்நுழைந்தமையினால் யாழ் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.