யாழில் ஒரு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது!

 


யாழ்ப்பாணம், கரவெட்டி இராஜகிராமத்தில் தனிமைப்படுத்தல் முடக்கம் அமுல்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


கரவெட்டி கிராமத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர் அங்கு பலருடன் பழகியுள்ள நிலையில் இவ்வாறு தனிமைப்படுத்தல் முடக்கம் அமுலுக்கு வந்துள்ளது.


இது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) மாலை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டுள்ள அவர்,


“பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்பிலிருந்த நிலையில், பருத்தித்துறை மற்றும் கரவெட்டி ஆகிய பகுதிகளில் மூவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.


இந்நிலையில், கரவெட்டி இராஜகிராமத்தைச் சேர்ந்தவர் கிராமத்தில் பலருடன் பழகியுள்ளார். இதையடுத்து தொற்று பரவலைத் தடுப்பதற்காக இராஜகிராமத்தில் தனிமைப்படுத்தல் முடக்கம் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றது.


சுமார் 60 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அங்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு பீ.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.


இதேபோல், பாசையூர் மேற்கு மற்றும் குருநகர் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கும் பீ.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன” என தெரிவித்துளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.