ஜேர்மனியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!!
கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெற்கு ஜேர்மனியில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கான்ஸ்டன்ஸில் இடம்பெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவைக் காட்டினர்.
அதே நேரத்தில் மற்ற குழுவில் வலதுசாரி ஆதரவாளர்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து இன்னுமொரு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, சனிக்கிழமையன்று வெவ்வேறு ஆர்ப்பாட்டங்களில் 10,500 முதல் 11,000 பேர் வரைபங்கேற்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் தொற்றைக் கட்டுப்படுத்த சமூக விலகல் போன்ற கட்டுப்பாடுகளை உள்ளூர் அதிகாரிகள் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை