மருத்துவர்கள் உள்ளிட்ட 23 பேருக்கு கேகாலையில் கொரோனா!
கேகாலை மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர் மருத்துவர் குமார விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கேகாலை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் பணியாற்றும் மூன்று மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதில் ஒரு மருத்துவரின் கணவர், கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக பின்னர் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக அவரது மகனும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், குறித்த மருத்துவரின் இளைய மகள் மற்றும் ஊழியர் ஒருவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்பத்தப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை