பயிர்ச்செய்கை மேற்கொள்வது தொடர்பில் அக்கராயன் மக்கள் கோரிக்கை!

 


கிளிநொச்சி அக்கராயன் மக்கள் தாம் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்த பகுதிகளில் தொடர்ந்தும் பயிர் செய்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு இன்று கரைச்சி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்திருந்தனர்.


 இன்று  (புதன்கிழமை) கரைச்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதன்போது குறித்த மக்களின் பிரதிநிதிகளாக மூவர் கரைச்சி பிரதேச செயலாளரை சந்தித்து தமது பிரச்சினைகளை முன்வைத்ததுடன் அவரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தனர்.


குறித்த காணியில் 40 ஆண்டுகளிற்கு மேலாக நெற்செய்கையில் ஈடுபட்டு வருவதாகவும்  தற்போது சிலர் பிரதேச செயலகத்தின் அனுமதி கடிதத்துடுன் தாம் கால போக செய்கை மெற்கொண்டுள்ள பகுதி அடங்கலாக கனரக வாகனங்கள் ஊடாக துப்பரவு செய்து வருவதகவும் அதனால் செய்கை மேற்கொண்டு்ள பகுதி பாதிக்கப்படுவதாகவும் இதன்போது பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.


 குறித்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேச செயலாளர் அவர்களிடம் தெரிவித்திருந்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.