2 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று!!

 


கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 2 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து குறித்த குழந்தையின் தாய் மற்றும் தந்தைக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


குறித்த குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.


அத்தோடு, அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. குறித்த பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்த நிலையிலேயே அவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.


இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்தார்.


எவ்வாறாயினும் வைத்தியசாலை ஊழியர்கள் யாருக்கும் இதனூடாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என அவர் தெரிவித்தார்.


இந்த நிலையில், அத்தியாவசியமற்ற விதத்தில் வைத்தியசாலைக்கு வருவதை தவிர்க்குமாறும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.