கொவிட்-19 தொற்றினால் அர்ஜெண்டீனாவில் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

 


தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டீனாவில், கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.


அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அர்ஜெண்டீனாவில் வைரஸ் தொற்றினால் மொத்தமாக, பத்து இலட்சத்து இரண்டாயிரத்து 662பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கொவிட்-19 தொற்றினால் உலகளவில் அதிக பாதிப்பை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் அர்ஜெண்டீனாவில் இதுவரை மொத்தமாக, 26ஆயிரத்து 716பேர் உயிரிழந்துள்ளனர்.


கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் கொவிட்-19 தொற்றினால், 12ஆயிரத்து 982பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 449பேர் உயிரிழந்துள்ளனர்.


தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 71ஆயிரத்து 981பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நான்காயிரத்து 392பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.


அத்துடன் இதுவரை எட்டு இலட்சத்து மூவாயிரத்து 965பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.