விரைவில் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்படுவார் – பாதுகாப்பு செயலாளர்!!

 


ரிஷாட் பதியுதீனை கைது செய்ய சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு சிறிது அவகாசம் வழங்குமாறு பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.


இந்த விவகாரத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளர் உட்பட பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சு இலக்கு வைத்து மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


மக்களின் கவலைகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், இந்த கைதுகளை மேற்கொள்வதில் பொலிஸார் பின்பற்ற வேண்டிய ஒரு வழிமுறை உள்ளது என கூறினார்.


ரிஷாட் பதியுதீனிடம் இருந்து வாக்குமூலம ஒன்றினை பெற்றுக்கொண்டு அவரை சி.ஐ.டி. யினர் கைது செய்ய திட்டமிட்டிருந்த போதும் துரதிர்ஷ்டவசமாக, அந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி ஊடகங்கள் மூலம் பொதுமக்கள் தெரிந்துகொண்டனர்.


இருப்பினும், அவர் கைது செய்யப்படவுள்ளதாக செய்தி வெளியானதும், அவர் தலைமறைவாகிவிட்டார் என கமால் குணரத்ன தெரிவித்தார்.


இப்போது அவரது சட்டத்தரணிகள் ரிட் விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளனர் எவ்வாறாயினும் ரிஷாட் பதியுதீன் விரைவில் கைது செய்யப்படுவார் என அவர் உறுதியளித்தார்.


மேலும் பதியுதீன் அல்லது அவரது கூட்டாளிகளுக்கு எந்த கருணையும் காட்ட தாங்கள் விரும்பவில்லை என தெரிவித்த கமால் குணரத்ன பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவரைக் கண்டுபிடிப்போம் என்றும் குறிப்பிட்டார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.