ரஷ்யாவில் புதிதாக 10,499 பேருக்கு கொரோனா தொற்று!

 


ரஷ்யாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 10,499 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.


கடந்த மே மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் பதிவான நாளாந்தம் அடையாளம் காணப்பட்ட மிகப்பெரிய எண்ணிக்கை இது என்றும் கூறப்பட்டுள்ளது.


இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் பலர் கொரோனா தொற்றினை அடுத்து முடக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.


இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 107 கொரோனா வைரஸ் இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


இதனை அடுத்து ரஷ்யாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,358 ஆக அதிகரித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.