பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

 


கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு பொலிஸாரால் விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இதன்படி, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள மாணவர்கள், பரீட்சை அனுமதிப்பத்திரத்தை ஊரடங்கு வேளை அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.


கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை என்பன நடத்தப்படவுள்ளன.


இந்நிலையில், பரீட்சை மத்திய நிலையங்களைப் பயன்படுத்தும் முறைமை தொடர்பாக கல்வி அமைச்சில் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.


இதன்போது, பரீட்சை நடவடிக்கைகளுக்காக பொலிஸார் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்த ஆராயப்பட்டுள்ளது.


மேலும், ஊரடங்குச் சட்டம் அமுலபடுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக, அந்தப் பகுதிகளை அண்மித்த இடங்களில் பரீட்சை மத்திய நிலையங்களை ஏற்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.


அத்துடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, மாணவர்களை பரீட்சை மத்திய நிலையங்களுக்கு அனுமதிப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளும் முறைமை குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.