கொழும்பை அடுத்து கண்டிக்கு செல்கிறது கொரோனா இரண்டாம் அலை

 


போகம்பரை சிறைச்சாலையில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கண்டி நகர் பாதிக்கப்படலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போகம்பர சிறைச்சாலையில் மேலும் 80 கொரோனாதொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.

போகம்பர சிறைச்சாலையில் நிலைமை மோசமடைகின்றது நாங்கள் 100 நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கான நிலையத்தையே உருவாக்கினோம் ஆனால் சிறைச்சாலையில் 800க்கும் அதிகமான கைதிகள் உள்ளனர் என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை ஊழியர்கள் உணவுபோன்றவற்றை பெறுவதற்காக கண்டி நகருக்கு செல்கின்றனர் இதன் காரணமாக கொரோனா வைரசினை கட்டுப்படுத்தாவிட்டால் கண்டிநகர் பாதிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.