பிள்ளையான் மீதான வழக்கு ஒத்திவைப்பு!


 நாடாளுமன்ற உறுப்பினரும் விளக்கமறியல் கைதியுமான பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு எதிர்வரும் 24ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மீதான வழக்கு விசாரணை இன்றைய தினம் இடம்பெற்றது.

மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 24ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.