நாடக நடிகர் ஒருவர் வெட்டிக்கொலை!


 பிரபல நாடக நடிகர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘தேன்மொழி பி.ஏ. ஊராட்சி மன்றத் தலைவர்’ தொடரின் மூலம் அறிமுகமானார்.

இந்த தொடரில் துணை நடிகராக நடித்து வந்தவர் தான் சென்னை எம்.ஜி.ஆர் நகர் வள்ளல்பாரி தெருவில் வசித்து வரும் செல்வரத்தினம் (45) தமிழீழ தமிழரான இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளன.

இவர் நடிப்பு மட்டுமின்றி ரியல் எஸ்டேட் உள்பட பல தொழிகள் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை 6.30.மணியளவில் எம்.ஜி.ஆர். நகர் அண்ணா மெயின் ரோடு பகுதிக்கு ஆட்டோவில் வந்த 4 பேர் வள்ளல் பாரி தெருவில் உள்ள செல்வரத்தினம் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீடு வாசலிலே செல்வரத்தினத்தை அவர்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் செல்வரெத்தினம் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் மிதந்தவாரு உயிரிழந்தார். அந்த பிறகு கொலை செய்த கும்பல் அருகாமையில் இருந்த சிசிடிவி கேமராவை சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எம்ஜிஆர் நகர் போலீசார் உடலை மீட்டும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த கொலை தொழில் பிரச்னையால் அரங்கேறியதா அல்லது வேறு எதுவும் காரணமா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.