கொரோனாவால் தப்பிய 5 இந்தியப்பிரஜைகள் !


 புத்தளம் குதிரை முனை கடற்பரப்பில் சட்டவிரோதமாக உலர்ந்த மஞ்சளினை கடத்த முற்பட்ட ஐந்து இந்திய பிரஜைகள் சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்களிடமிருந்து 1372 கிலோ 300 கிராம் உலர்ந்த மஞ்சளும் கைப்பற்றப்பட்டது.

இதன்போது, குறித்த மீன்பிடிப் படகில் உலர்ந்த மஞ்சளை கொண்ட 39 பொதிகள் ஏற்றப்பட்டு இருந்ததை கண்டுகொண்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட மஞ்சள், கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக மீண்டும் இந்திய கடற்பரப்பிற்குள் அனுப்பி வைத்ததாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.