கொழும்பில் 704 கொரோனா நோயாளிகள் நேற்று அடையாளம்!


இலங்கையில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 704 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 541 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 39 பேர் கம்பஹாவை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 8 பேர் காலியைச் சேர்ந்தவர்கள் என்றும் 54 பேர் பொலிஸார் என்றும் 12 பேர் போகம்பரை சிறைச்சாலையைச் சேந்தவர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 287 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 11 ஆயிரத்து 495 பேர் குணமடைந்துள்ளதுடன் 5 ஆயிரத்து 734 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 58 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.