மினுவாங்கொட- பேலியகொட கொத்தணி 9000 ஐ கடந்த தொற்றாளர் எண்ணிகை!!
மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 9,000 ஐ கடந்துள்ளது.
குறித்த கொத்தணியுடன் தொடர்புடைய 383 பேர் நேற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து, இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் நேற்று அடையாளம் காணப்பட்ட 383 தொற்றாளர்களும், மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து , நாட்டில் மொத்த நோய்த்தொற்று எண்ணிக்கை 12,570 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை மினுவாங்கொட-பேலியகொட கொத்தணி 9,092 ஆக உயர்ந்துள்ள தற்போது, 50 மருத்துவமனைகளில் 5,918 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்த 765 பேர் வெளியேறியதை தொடர்ந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,623 ஆக உயர்ந்த நிலையில் இலங்கையில் ஒரேநாளில் அதிகமானவர்கள் குணமடைந்து வெளியேறிய சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை