மேலும் 9 கொரோனா தொற்று மரணங்கள்!


 இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 9 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (21) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பை சேர்ந்த ஒன்பது பேரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

விபரங்கள்,

  1. கொழும்பு 2ஐ சேர்ந்த 57 வயது ஆண்.
  2. வெல்லம்பிட்டியை சேர்ந்த 65 வயது ஆண்.
  3. வெல்லம்பிட்டியை சேர்ந்த 75 வயது பெண்.
  4. தெமட்டகொடயை சேர்ந்த 89 வயது ஆண். இவர் வீட்டில் மரணமடைந்தார்.
  5. கொழும்பு 10ஐ சேர்ந்த 48 வயது பெண். இவர் வீட்டில் மரணமடைந்தார்.
  6. கொழும்பு 10ஐ சேர்ந்த 72 வயது ஆண். இவர் வீட்டில் மரணமடைந்தார்.
  7. கொழும்பு 13ஐ சேர்ந்த 69 வயது பெண். இவர் வீட்டில் மரணமடைந்தார்.
  8. வெள்ளவத்தையை சேர்ந்த 76 வயது ஆண்.
  9. கொழும்பை சேர்ந்த 76 வயது பெண்.

இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 83 பேர் மணமடைந்துள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட மூவர் இதுவரை தற்கொலை, விபத்து மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக மரணமடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.