தனிமைப்படுத்தலில் அலரிமாளிகை!


கொரோனா பரவலை அடுத்து, இலங்கைப் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகை தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாகவே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், மறு அறிவித்தல் வரை அலரிமாளிகையில் பணியாளர்கள் கடமைக்குச் சமூகமளிக்கத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அலரிமாளிகையின் பாதுகாப்புக்காக பணியில் அமர்த்தப்பட்டுள்ள விஷேட அதிரடிப்படையினர் பலருக்கும் கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே அலரிமாளிகையைத் தனிமைப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.