ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் பலர் கைது!!
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த காலப்பகுதியில் 25 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 1,992பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 307 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேபோன்று கடந்த நான்கு நாட்களில் முகக்கவசம் அணியத் தவறியமை மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுகளுக்காக 73பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை