ரிஷாட் பதியுதீனின் பிணை மனு கோரிக்கை நிராகரிப்பு


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் பிணை மனு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி, குற்றப்புலனாய்வு பிரிவினரால் ரிஷாட் பதியுதீனின் கைது செய்யப்பட்டு, கோட்டை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ரிஷாட் பதியுதீனின் பிணை கோரி நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

குறித்த மனுவை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு உட்படுத்துவதாக நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையிலேயே ரிஷாட் பதியுதீனின் விவகாரத்தை விசாரணைக்கு உட்படுத்திய நீதிமன்றம், மனு கோரிக்கையை நிராகரித்ததுடன், எதிர்வரும் 25ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறும்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு தினத்தில்,புத்தளம் பகுதியிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை, அரச பேருந்துகள் ஊடாக மன்னார் பகுதிக்கு அழைத்து சென்று வாக்களிக்க வைத்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.