பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது!!


யாழ். மாவட்டத்தில் பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 இளைஞர்களை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், கோப்பாய், சுண்ணாகம், மல்லாகம் பகுதிகளில் அண்மையில் பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றன.

திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் நகைகள், பணம், இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இந்த திருட்டு மற்றும் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நல்லூர், கோப்பாய், மல்லாகம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 5 இளைஞர்களை கோப்பாய் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட அனைவரிடமும் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இந்த ஐந்து பேரையும் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.