யாழ் பல்கலைக்கழகத்திற்கு தனியான பேருந்து சேவை ஆரம்பம்

 


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்தும் யாழ் பல்கலைக்கழகத்திற்கு வரும் பணியாளர்களுக்கென தனியான போக்குவரத்து சேவைகள் இன்று (11) முதல் ஆரம்பமாகவுள்ளன.

பருத்தித்துறை, கொடிகாமம், தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து யாழ் பல்கலைக்கழகத்துக்கு இந்த சேவை இடம்பெறவுள்ளது என்று யாழ் பல்கலைக்கழக நிர்வாகக் கிளையின் பிரதிப்பதிவாளர் ம.கணேசலிங்கம் அறிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தினுள் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் மார்க்கத்தில் அச்சுவேலி, இராச வீதி, கோப்பாய் வழியாக வரும் பேருந்து புலோலி சந்தியில் இருந்தும், ஏ-9 மார்கத்தில் வரும் பேருந்து கொடிகாமத்திலிருந்தும், காரைநகர் மார்க்கத்தில் வரும் பேருந்து வட்டுக்கோட்டை சந்தியில் இருந்தும் தினமும் காலை 7 மணிக்குப் புறப்படுவதுடன், மாலையில் பிற்பகல் 4.15 மணிக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து திரும்புவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.