சிவகங்கையில் கொரோனா பரவல் குறித்து ஆராயும் முதலமைச்சர்!
சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து எதிர்வரும் 4ஆம் திகதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். இதன் ஒருகட்டமாக சிவகங்கையில் 4ஆம் திகதி அவர் ஆய்வு செய்யவுள்ளார்.
சென்னையிலிருந்து 4ஆம் திகதி மதுரைக்கு செல்லும் முதலமைச்சர், அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில், மதுரை மாநகர் மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைத்திடும் வகையில் முல்லைப் பெரியாற்றில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.
இதையடுத்து சிவகங்கை சென்று அங்குள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை