தனியார் நிறுவனமொன்றில் 53 இந்தியர்களுக்கு கொரோனா!


கொழும்பிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றிய 53 இந்திய பிரஜைகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் 93 இந்திய பிரஜைகள் கடமையாற்றி வந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு மாநகர சபையினால் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளிலேயே, அவர்களுக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொற்றுக்குள்ளான 9 இந்திய பிரஜைகள் பிங்கிரய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஏனைய 44 பேரை வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஏனைய இந்திய பிரஜைகள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.