இலங்கையில் கொரோனாவால் மேலும் இரு மரணங்கள் பதிவு!
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று இதுவரை 03 புதிய மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
இறுதியை உயிரிழந்தவர்கள் கொழும்பு 11 ஐ சேர்ந்த 40 வயது ஆண் என்றும் மற்றுமொருவர் களனி பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றினால் 42 ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளது.
பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த 80 வயதுடைய பாணந்துறை பகுதியை சேர்ந்தவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை