மேலும் இரண்டு மாவட்டங்களில் கொரோனா!!

 


இலங்கையின் இரண்டாம் அலைப் பரவலானது மிகத் தீவிரமாக பரவிக் கொண்டுள்ளது.

தற்போது இலங்கையில் அனைத்து மாவட்டக்களிலும் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் கண்டியிலும், புத்தளத்திலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் இதுவரை 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 1,122 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தின் கங்கவட்டகோரளய பகுதியில் ஒருவரும் குண்டசாலை பிரதேச செயலாளர் பிரிவில் 5 பேரும் பாதத்தும்பறையில் ஒருவரும் யட்டிநுவரவில் இருவரும் உடபலாத்தயில் 9 பேரும், இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

மேலும் தெல்தொட்டையில் 4 பேரும் மெதத்தும்பறையில் 4 பேரும் உடதும்பறை, மினிப்பே, அக்குறணை, ஹரிஸ்பத்துவ ஆகிய பிரதேசங்களில் தலா ஒருவரும் தும்னேயில் இருவரும் கங்கஇஹலகோரள பகுதியில் ஐவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருள்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இஇதேவேளை, இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையில் புத்தளம் நகரில் முதலாவது கொரோனா தொற்றாளர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புத்தளம் உடையார் வீதி வெட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் வெளிநாடு செல்வதற்காக பீ.சி.ஆர். பரிசோதனை செய்த போதே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

புத்தளம் நகரில் முதலாவது கொரோனா தொற்றாளியின் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் பொதுசுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.