மறு அறிவித்தல் வரை 112 வர்த்த நிலையங்களுக்கு பூட்டு!!
கொரோனா அச்சநிலைமை காரணமாக கண்டி ஹேவாஹெட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 112 வர்த்த நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை குறித்த வர்த்தக நிலைய பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பேலியகொடை மீன்சந்தை கொத்தணியுடன் தொடர்புள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து வர்த்தக நிலையத்தின் அனைவரும் தங்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை