கொரோனா தொற்றில் இருந்து மேலும் 765 பேர் குணமடைந்தனர்!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 765 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றில் இருந்து இதுவரையில் 6 ஆயிரத்து 623 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.
நாட்டில் இதுவரையில் 12 ஆயிரத்து 187 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 6 ஆயிரத்து 623 பேர் குணமடைந்துள்ள நிலையில், 5 ஆயிரத்து 540 பர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும், இந்த வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில் 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை