கொரோனா தொற்றில் இருந்து மேலும் 765 பேர் குணமடைந்தனர்!!

 


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 765 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றில் இருந்து இதுவரையில் 6 ஆயிரத்து 623 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

நாட்டில் இதுவரையில் 12 ஆயிரத்து 187 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 6 ஆயிரத்து 623 பேர் குணமடைந்துள்ள நிலையில், 5 ஆயிரத்து 540  பர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், இந்த வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில் 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.