அல்லைப்பிட்டி வந்த இளைஞனுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி


கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த (22 வயது) இளைஞனொருவர், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கொவிட் -19 தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த இளைஞரின் தாயார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த தகவலை வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், நேற்று (சனிக்கிழமை) மாலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். அவர் தனக்கு காய்ச்சல் உள்ளதாகவும் உடல்நிலை சரியில்லை என்றும் தாயாருக்கு அறிவித்துள்ளார்.

அதனால் தாயார், அவரை யாழ்ப்பாணம் நகர் பேருந்து நிலையத்துக்குச் சென்று அல்லைப்பிட்டியிலுள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொவிட் -19 தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், அவரது மாதிரிகள் பி.சி.ஆர்.பரிசோதைக்காக எடுக்கப்பட்டுள்ளன. இன்று பி.சி.ஆர்.பரிசோதனை அறிக்கை கிடைக்கும் என கூறப்படுகின்றது.

அத்துடன், இளைஞனின் தாயார் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.