கொரோனாவால் மரணிப்போரை புதைத்தால் நீரில் வைரஸ் பரவும்!!

 


கொரோனா வைரஸினால் உயிர்ழப்பவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டால், நிலத்தடி நீரில் கொரோனா வைரஸ் கலந்து குடிநீர் ஊடாக அல்லது ஊற்று நீர், ஓடைகள் வழியாகவும் அச்சுறுத்தல் வரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான பேராசிரியர் மெதிக்கா வித்தானகே தெரிவித்துள்ளார்.

உயிரிழக்கும் முஸ்லிகளின் ஜனாஸாக்கள் எரிக்கப்படாமல் புதைக்க அனுமதி வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு பல வழிகளிலும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

குறிப்பாக இவ்வாறு உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை அல்லது சடலங்களை மக்கள் அதிகம் நடமாட்டம் இல்லாத தீவுப் பகுதி அல்லது வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் புதைக்க அரசாங்கம் அனுமதி வழங்கியது.

எனினும் சுகாதார அமைச்சு இதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் குறித்த எச்சரிக்கையினை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.