கொரோனா பாதிப்பால் மக்களிடம் பகல்கொள்ளை!


கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு வடக்கு பகுதியில் கொரோனாவை பயன்படுத்தி சிலர் மக்களிடம் பகல் கொள்ளையில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

தொலைபேசிகளுக்காக பயன்படுத்தப்படும் கட்டண மீள்நிரப்பு அட்டைகளின் (Mobile Recharge Cards) பெறுமதியை விடவும், அதிக விலைகளில் குறித்த மீள்நிரப்பு அட்டைகள் விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு வடக்கு பகுதியிலேயே இவ்வாறான செயல்களில் சிலர் ஈடுபடுவதாகவும் நுகர்வோர் குற்றஞ்சுமத்துகின்றனர்.

அதன்படி மட்டக்குளி, கொட்டாஞ்சேனை, ஆமர்வீதி, முகத்துவாரம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளாக கூறப்படுகின்றது

100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்ற தொலைபேசி மீள்நிரப்பு அட்டை 100 ரூபா முதல் 120 ரூபா வரை விற்பனை செய்யப்படும் அதேவேளை, 50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் தொலைபேசி மீள்நிரபு அட்டை 55 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்ற்சனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.