இந்தியாவில் PCR பரிசோதனை எண்ணிக்கை 11.85 கோடியை கடந்தது!!

 


இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 11.85 கோடியை கடந்துள்ளதென இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம், 8.35 இலட்சம்  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் மருத்துவ ஆராய்ச்சி சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 85.53 இலட்சமாக உயர்ந்துள்ளது. 79.17 இலட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 5.09 இலட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 92.56 சதவீதமாகவும் உள்ளது.

மேலும், கொரோனா தொற்றை விரைவாக கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவான பரிசோதனைகள் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.