நாளொன்றுக்கான கொவிட்-19 அதிகபட்ச பாதிப்பு பதிவானது!

 


ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவு, நாளொன்றுக்கான அதிகபட்ச கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ரஷ்யாவில் 24ஆயிரத்து 318பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததோடு, 461பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரை மொத்தமாக 20இலட்சத்து 39ஆயிரத்து 926பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 35ஆயிரத்து 311பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நான்கு இலட்சத்து 53ஆயிரத்து 201பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர ரஷ்யாவில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 15இலட்சத்து 51ஆயிரத்து 414பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.