கட்டுபாட்டை மீறி தமிழ் குடும்பமொன்று நடத்திய நிகழ்வால் பலருக்கு கொரோனா!


லண்டனில் லாக் டவுனையும் மீறி தமிழ் குடும்பம் ஒன்று மகளுக்கு வீட்டில் புப் புனித நீராட்டு விழா செய்துள்ள நிலையில், விழாவுக்கு சென்ற 25 தமிழர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மிகவும் இரகசியமாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் தூரத்தில் காரை நிறுத்தி விட்டு, உறவினர்கள் குறித்த விழாவிற்கு சிறுது சிறிதாக சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் வங்கியில் வேலை செய்யும் பெண் ஒருவர், வங்கிக்கு சென்று. மதியம் வேலை முடித்த பின்னர் அங்கேயே உடைகளை மாற்றி குறித்த நிகழ்வுக்கு சென்றுள்ளார்.

இதேவேளை குறித்த பெண்ணிற்கு கொரோனா இருந்தமை அவருக்கே தெரியாத நிலையில், விழாவில் கலந்துகொண்ட சுமார் 25 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி ஒரு குடும்பத்தில் அப்படியே, அப்பா அம்மா மகள் மற்றும் மகன் ஆகியோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இது தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ள சமூக ஆர்வலர்கள், இனியாவது இப்படியான காரியங்களை நம்மவர்கள் செய்து மற்றவர்களுக்கு ஆபத்தினை விளைவிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.