மூடப்பட்டது ஏறாவூர் பொதுச் சந்தை!!
ஏறாவூர் புன்னைக்குடாவீதியிலுள்ள ஏறாவூர் பொதுச் சந்தை இன்று உடனடியாக மூடப்பட்டது.
ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் உள்ள மிச்நகர் கிராமத்தில் முதன் முதலாக மீன் வியாபாரி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர சபைத் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித் தெரிவித்தார்.
அத்துடன் ஏறாவூர் பொதுச் சந்தை வளாகத்தின் அனைத்து பகுதிகளும் கிருமி நீக்கி கொண்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது.
அதோடு மேற்படி சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த அனைத்து சந்தை வியாபாரிகளும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
மேலும் ஏறாவூர் நகர பிரதேசத்தில் அதிகாரிகள் மட்டத்தில் நடந்த கொரோனா வைரஸ் தடுப்பு செயலணியின் உயர் மட்டக் கூட்டத்தில் இயல்பு வாழ்க்கையை இறுக்கமாக்கும் பல தீர்மானங்கள் எட்டப்பட்டதாகவும் நகர சபைத் தலைவர் தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை