மேலும் ஒரு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு பூட்டு!
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் அடிப்படையில் 21 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை வெள்ளிக்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக மூடுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தீர்மானித்துள்ளார்.
ஆளுநரின் இத்தீர்மானம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குறித்த வலயத்திலுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான தினம் பின்னர் அறிவிக்கப்படும். இந்நிலையின் கீழ் எழுமாற்று பரிசோதனைகளின் அளவை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதற்கும் மேலதிகமாக அக்கறைப்பற்று, சாய்ந்தமருது மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்கள் இந்த அபாய நிலைமையைக் கருத்திற் கொண்டு சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடமாடுமாறும், இயன்றளவு வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும் கோரப்படுகிறது.
மக்கள் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றி வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை