கிளிநொச்சியில் கொரோனா தொற்றுக்குள்ளானவின் பயணவிபரம்!!


கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 1வது நபரின் பயண விபரம் வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில் துரிதகதியில் சுகாதார அதிகாரிகளினால் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.

கொழும்பில் உள்ள மயூரா உணவகத்தில் பணியாற்றிய குறித்த நபர் கொழும்பிலிருந்து கடந்த 25ம் திகதி கொழும்பு - வவுனியா பேருந்தில் பயணித்து காலை 10 மணிக்கு வவுனியா வந்தடைந்துள்ளார்.

அதன்பின்னர் அங்கிருந்து மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் - வவுனியா பேருந்தில் கிளிநொச்சி - பரந்தன் வரை பயணித்த குறித்த நபர் பரந்தன் சந்தியில் பழங்களை வாங்கிக் கொண்டு,

மாலை 6.15 மணிக்கு முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் தர்மபுரம் சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் பயணித்த பேருந்துக்கள், இடங்கள், நேரம், என்பவற்றின் அடிப்படையில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.