வீதி திருத்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி பரிதாப பலி!!
யாழ்ப்பாணம் வடமராட்சி முள்ளி பகுதியில் வீதி திருத்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி றோலரருக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பனாங்கொடை பகுதியை சேர்ந்த எஸ்.பி. பிரேமரட்ன (வயது 62) எனும் நபரே உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி – கொடிகாமம் வீதி திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் குறித்த பணியில் தொழிலாளி ஈடுபட்டிருந்த போது , பணியில் ஈடுபட்டிருந்த றோலருக்குள் சிக்குண்டு, படுகாயமடைந்துள்ளார்.
அதனை அடுத்து சக தொழிலாளர்கள் அவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை