உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தற்பணிகள் இன்று ஆரம்பம்!


கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எஸ். பிரணவதாசன் இந்த விடயத்தை எமது கெப்பிட்டல் செய்திப் பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

இதன்படி கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின்போது குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் தோற்றிய பாடங்களுக்கான மதிப்பீட்டு நடவடிக்கைகளே முதலில் ஆரம்பிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தற்போது காணப்படும் சூழ்நிலையின் அடிப்படையில் மேல் மாகாணத்தில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகளை உரிய திகதியில் நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எனினும், பாடசாலைகளின் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.