இந்தியா சீனா மோதல் குறித்து ரஸ்யாவின் கருத்து!!
ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த நாடுகளான சீனாவும், இந்தியாவும் மோதிக் கொண்டால் இதனை வைத்து மற்ற நாடுகள் அரசியல் செய்யும் என ரஷ்ய துணைத் தலைவர் ரோமன் பாபுஸ்கின் தெரிவித்துள்ளார்.
எல்லை விவகாரத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பதற்ற நிலை நீடித்து வருகின்றது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் ரஷ்யா தற்போது தலையிட்டுள்ளது.
இது குறித்து ரஷய் துணைத் தலைவர் தெரிவிக்கையில், ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய சக்திவாய்ந்த நாடுகளான சீனாவும் இந்தியாவும் மோதிக்கொள்வது ஒருங்கிணைந்த ஆசிய மற்றும் ஐரோப்பிய பிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருநாடுகளும் எல்லைப்பகுதியில் போர் புரிவதை கைவிட்டுவிட்டு சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். சீனா-இந்தியா ஆகிய இரு நாடுகளுமே எஸ்சிஓ மற்றும் பிரிக்ஸ் அமைப்பில் இடம் பெற்றுள்ளன. இந்த இரு நாடுகளும் மோதிக் கொண்டால் மற்ற நாடுகள் இதனை வைத்து அரசியல் செய்ய வாய்ப்புள்ளது.
ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் கட்டாயம் ஈடுபடவேண்டும். இரு நாட்டு இராணுவ உயர் அதிகாரிகளும் இது குறித்து விரிவாக பேசவேண்டும். கடந்த ஆறு மாதமாக லடாக் பகுதி மூடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுமே பொருளாதாரம், கலாசாரம், பாதுகாப்புத்துறை ஆகியவற்றில் வளர்ச்சி அடைந்த நாடுகள். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் பிரிக்ஸ் குழுமம் ஆகிய இரு அமைப்புகளும் இந்த எல்லை விவகாரத்தில் தலையிட்டு இரு நாடுகளுக்கும் உள்ள பிரச்சினையை தீர்த்துவைக்க வேண்டும் என” அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை