கொரோனா அபாய நிலையை கருத்தில் கொள்ளாது யாழ்நோக்கி படையெடுக்கவுள்ள அமைச்சர்கள் குழு!!

 


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அபாய நிலையை கருத்தில் கொள்ளாது இருபதிற்கு மேற்பட்ட தெற்கு அமைச்சர்களை கொண்ட குழு யாழ்.நோக்கி வருகை தர ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றதாக கூறப்படுகின்றது.

எதிர்வரும் 6மற்றும் 8ஆம் திகதிகளில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காகன ஏற்பாடுகள் முழு வீச்சில் இடம்பெறுவதாக அறியக்கிடைத்தது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக தெற்கு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களை உள்ளடக்கிய குழு வருகைதரவுள்ளதாக கூறப்படுகின்றது.

நாட்டில் தற்போது நிலவி வரும் ஒரு அபாய சூழ்நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் குறித்த குழு கொழும்பிலிரந்து யாழ்.நோக்கி வரும் ஏற்பாடு சுகாதார நடைமுறைகள் தொடர்பில் பலத்த கேள்வியை எழுப்புகின்றது.

வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்த அளவுக்கு உட்படுத்தப்படுவார்கள் என வடமாகாண சுகாதார தரப்புகள் அறிவித்துள்ள நிலையில் கொழும்பிலிரந்து யாழ்.நோக்கி வருகை தரவுள்ள அமைச்சர் குழு 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்களா? என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.