8,302 பேர் தொடர்ந்தும் சிறைகளில் இருக்கின்றனர்!!
அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கைகளை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் 8,302 பேர் தொடர்ந்தும் சிறைகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் மறுவாழ்வு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அறிக்கைகளை வெளியிடுவதை விரைவாகக் கண்காணிப்பது நீதிமன்ற நடவடிக்கைகளை முடிக்க வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு அறிக்கைகளை முடிக்க வழங்கப்பட்ட ஒன்றரை மாத காலக்கெடுவை பூர்த்தி செய்ய முடியாமல் போனமை குறித்து இராஜாங்க அமைச்சர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை