பொலிஸாரின் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது உணவகம்!


யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள, உணவகமொன்றிலிருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக  கண்டெடுக்கப்பட்டவர், உணவகத்தில் பணியாற்றுவதற்காக மூன்று தினங்களுக்கு முன்னர்,தெற்கிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சடலம்  கண்டெடுக்கப்பட்ட உணவகத்தில் கடமையாற்றும், பணியாளர்கள் வெளியேறுவதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸாரின் தீவிர கண்காணிப்புக்குள் உணவகம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், சடலமாக கண்டெடுக்கப்பட்டவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

தெற்கிலிருந்து வருகை தந்தவர் என்ற அடிப்படையில் மாதிரிகள் எடுக்கப்பட்டு, பி.சி.ஆர்.பரிசோதனைகள் இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக எமது  பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.