வடக்கில் உணவகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்கிறது!

 


வடக்கு மாகாணத்தில் உணவகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நாளை சனிக்கிழமை தொடக்கம் தளர்த்தப்படுவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் உள்ள உணவகங்களின் இருக்கைகளுக்கு ஏற்ப 50 சதவீதமானவர்கள் உட்கார்ந்து உணவு உட்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியைத் தொடர்ந்து கடந்த மாதம் முதல் வடக்கு மாகாணத்தில் உணவகங்களில் இருந்து உணவு உட்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், சுமார் ஒரு மாதத்தின் பின்னர் அந்தத் தடை நீக்கப்பட்டு புதிய கட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்படுகிறது மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.